Thursday, April 2, 2020


பேரிடர் சூழல் சொல்லும் சிந்தனை
*இந்த பதிவு சிந்தனைக்காக மட்டுமே*

இப்போது நாம் செய்யவேண்டிய செயல்களில் சில...

இப்போது நிலவும் சூழ்நிலை நீண்ட நாள் நீடிக்காமல் போனாலும் இதனுடைய தாக்கம் பலவகைகளில் காணப்படும்.
சுழன்று கொண்டிருந்த பொருளாதாரம் தேங்க தொடங்கியுள்ளது. பணம் ஆனது தனது மதிப்பில் நிலைக்க சிரமப்படும். அரசாங்கம் தனது சேவையின் அதிகபட்ச எல்லையை அடைந்து விட்டது.

  • முதலில் தொலைக்காட்சி போன்ற  கேளிக்கைகளை  விட்டு விலகுங்கள். அவை வாழ்வில் ஒரு மிகச்சிறு அங்கமாக மட்டுமே இருக்கவேண்டும்.
  •  மனிதகுலமாக நாம் கடந்து வந்த பாதைகளை பற்றி சிந்தியுங்கள். இந்த சூழலுக்கான காரணிகளும் தீர்வுகளும் உங்களுக்கே புரியும்.
  •  உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள். வேண்டியோருக்கு உணவளியுங்கள். ஆதரவாக இருங்கள்.
  • மிகுதியான உணவு உற்பத்தி என்பது ஓர் முக்கிய தேவைகளில் ஒன்று என்பதை உணருங்கள் 
  •  விவசாயம் செய்வோர் அதில் தீவிரமாக ஈடுபடுங்கள். வாய்ப்பிருப்பவர்கள் வீட்டின் சுற்றுப்புறங்களை ஆக்கத்திற்காக பயன்படுத்த தொடங்குங்கள்
  •  அத்தியாவசிய தேவைகளை சுயமாக நிறைவேற்ற முற்படுங்கள். அது ஒரு மிகச்சிறு செயலாகவும் இருக்கலாம். நுகர்வோர் கலாச்சாரம் இனி  கடினம்.
  • நாம் இனி விழிப்புடன் உழைக்க வேண்டிய தருணம்உடல்நலத்தை பேணுங்கள்கேளிக்கை உணவுகளை முற்றிலும் தவிருங்கள்.   உணவு மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் 
  • சிந்தனைகளை சீர்படுத்துங்கள்தெளிவான சிந்தனை மட்டுமே தீர்வு கொடுக்கும்கோடிக்கணக்காண மக்களின் சிந்தனை சக்தி நமக்கு தேவை. பெரும் பொறுப்பை ஒரு சிலரிடம் ஒப்படைத்து விலகுவது முறையல்ல.
  •  இலக்கியம் மற்றும் பாரம்பரிய வழிகளை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள். பாரம்பரிய அறிவை பகிருங்கள். அனைவரும் அதற்கு முற்படுங்கள்.
  • அரசு என்னும் இயந்திரம் இதற்கு மேலும் பாரம் தங்குவது கடினம்நாம் ஒவ்வொருவரும் செயலாற்றுவோம்
  • நமது கடவுளரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்நமக்காக மட்டுமின்றி சமூக நலனுக்காகவும்உலக நன்மைக்காகவும் சேர்த்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
நல்ல விருப்பமும் சிந்தனையும்  நல்லவிளைவுகளை  மட்டுமே தரும்
*வாழ்வோம் வளமுடன்*

No comments:

Post a Comment

பேரிடர் சூழல் சொல்லும் சிந்தனை * இந்த பதிவு சிந்தனைக்காக மட்டுமே * இப்போது நாம் செய்யவேண்டிய செயல்களில் சில ... இப்போ...